கோபிக்கு ஆதரவாக இருக்கும் ராதிகாவின் அம்மா, வெளியே போக சொல்லும் ராதிகா – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவின் அம்மா ராதிகா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது கோபி வந்து எனக்கு ராதிகாவும் மயூராவும் தான் எனக்கு முக்கியம் என சொல்ல, கோபிக்கு ஆதரவாக ராதிகாவின் அம்மா இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வீட்டிற்கு கோபி வர அப்போது ராதிகாவின் அம்மா இருக்கிறார். கோபியை பார்த்து டீச்சர் தான் உங்களது மனைவி என ராதிகாவிடம் ஏன் சொல்லாமல் மறைத்தீர்கள் என ராதிகாவின் அம்மா கேட்கிறார். ராதிகா நீங்க பொய் சொன்னதால் உங்க மீது மிகவும் கோவமாக இருக்கிறார் என சொல்ல, பாக்கியா தான் என்னுடைய மனைவி என தெரிந்தால் ராதிகா என்னுடன் பேசாமல் இருந்துவிடுவார் என்பதால் தான் உண்மையை மறைத்தேன் என கோபி சொல்கிறார்.
ராதிகாவும் பாக்கியாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்க நான் எப்படி உண்மையை சொல்வேன் என தெரியவில்லை என கோபி சொல்கிறார். பின் ராதிகா வந்து வெளியே போங்க என சொல்லி சத்தம் போடுகிறார். நீங்க வெளியே போகாமல் இருந்தால் நான் சென்றுவிடுவேன் என சொல்கிறார். அதனால் கோபி நான் போகிறேன் என சொல்கிறார். ராதிகாவின் அம்மா கோபி உனக்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என சொல்ல, உன் கோவத்தால் சிறு குழந்தையின் மனதை கெடுக்காதே என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
பின் ராதிகா அம்மா இப்படி பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் கோபி மீது இருக்கும் சந்தேகத்தை பாக்கியா ஆதாரத்துடன் காட்ட ஆனால் கோபி அப்படியெல்லாம் இல்லை என நல்ல விதமாக நடந்து கொள்கிறார். இரு பக்கமும் கோபியின் நாடகத்தை இப்போதும் குடும்பத்தினர் நம்புகின்றனர். அதனால் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.