உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா, கோபியை வெளியே போக சொல்லி அதிரடி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவிற்கும் பாக்கியாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜெனி பேசிய பின் பாக்கியா மீது ராதிகாவுக்கு அனுதாபம் வந்துள்ளது. இந்நிலையில் ராதிகாவிற்கு கோபி தான் பாக்கியாவின் கணவர் என்ற உண்மை தெரியப் போகிறது. அதனால் ராதிகா கோபியை வெளியே போக சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இனி வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. பாக்கியா மீது பெரிய பழி ஒன்று விழ அதில் பாக்கியா மீது எந்த எந்த தவறும் இல்லை என எழில் நிரூபித்து விடுகிறார். ஆனால் பாக்கியாவால் ஒரு நாள் முழுவதும் ஜெய்யிலில் ராதிகா இருக்க, இதெற்கெல்லாம் பாக்கியா தான் காரணம் என்பதால் அவர் மீது ராதிகாவுக்கு கோவம் வருகிறது. கஷ்டப்பட்டு கோபி ராதிகாவை வெளியே எடுக்க ராதிகா இனிமேல் என் வாழ்க்கையில் நீங்க வராதீங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மாமியாரிடம் இருந்து தப்பித்த ஆல்யா மானசா – என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
அதை நினைத்து பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார். ஜெயிலில் இருந்து வெளியே வர குடும்பத்தினரிடம் ராதிகா தன்னை தவறாக நினைத்துவிட்டார் என பேசி புலம்புகிறார். இதை எல்லாம் ராதிகாவை சந்தித்த ஜெனி சொல்ல அதை கேட்டு ராதிகாவுக்கு தவறு செய்துவிட்டது போல தோன்றுகிறது. பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோபியிடம் ராதிகா சொல்ல ஆனால் கோபி உன் மேல் எந்த தவறும் இல்லை என சொல்கிறார். ஆனாலும் ராதிகாவுக்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறது.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் ராதிகா நேராக கிளம்பி பாக்கியா வீட்டிற்கு செல்கிறார். அங்கே ராமமூர்த்தி ராதிகாவை பார்த்துவிட்டு கோபி பாக்கியா புகைப்படத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார். ஆனால் ராதிகா அதை கவனிக்காமல் இருக்க இறுதியாக கோபி புகைப்படத்தை பார்த்துவிடுகிறார். அதனால் கோபி மீது கோவப்பட்ட ராதிகா இனிமேல் என் வாழ்க்கையில் வராதீங்க வெளியே போங்க என சொல்கிறார். கோபிக்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார்