மாமியாரிடம் இருந்து தப்பித்த ஆல்யா மானசா – என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் அறிமுகமாகிய சின்னத்திரை ஜோடிகள் ஆன ஆல்யா மற்றும் சஞ்சீவ் தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக பிரபலமாகி வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் ஆல்யா தனது மாமியாருக்கு அல்வா கொடுத்து தப்பித்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆல்யா மற்றும் சஞ்சீவ்:
சின்னத்திரை நட்சத்திரங்களாக ராஜா ராணி சீரியலில் நடித்து நல்ல வரவேற்புகளையும், அதிகளவு ரசிகர் பெருமக்களையும் குவித்த ஜோடிகள் என்றால் அது ஆல்யா மற்றும் சஞ்சீவ் தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரது ஜோடி பொறுத்தம் வேற லெவல் ஆக ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியதை உண்மை ஆக்கும் வண்ணம் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இன்று வரை ஆல்யா வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையிலும் அனைத்து பெண்கள் கண்ணே படும் அளவுக்கு சஞ்சீவ், ஆல்யாவுக்கு அன்பை பகிர்ந்து வருகிறார்.
“சிறந்த காமெடியன்” அவார்ட் வாங்கிய விஜய் டிவி பாலா – மேடையில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்!
பின்பு ஆல்யாவுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்ததை அடுத்து சீரியலில் இருந்து பிரேக் எடுத்த ஆல்யா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஐலாவுடன் விளையாடுவது, ஷாப்பிங் செல்வது போன்ற விஷயங்களை பதிவிட்டு வந்தார். அப்போது தான் மீண்டும் ரீ எண்ட்ரியாக ராஜா ராணி சீசன் 2ல் சந்தியாவாக நடித்து வந்தார். சந்தியா ரோல் மூலம் மீண்டும் ஹிட் அடித்தார் ஆல்யா. அதன் பிறகு இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா மீண்டும் சீரியலை விட்டு விலகி தற்போது அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
ExamsDaily Mobile App Download
சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ஆல்யா தினசரி வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளையும், குழந்தையின் பிறந்த நாள் நிகழ்வு, ஆல்யா மானசாவின் வளைகாப்பு என அனைத்தையும் ரசிகர்களுடன் ஷேர் செய்து வந்த நிலையில் தற்போது சஞ்சீவ் அவர்கள் தனது மனைவி ஆல்யா, இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் விதங்களையும், வீட்டில் ஸ்வீட் அல்வா செய்து மாமியாருக்கு கொடுக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.