மறுபடியும் ராஜேஷுடன் சேர்ந்து வாழ நினைக்கும் ராதிகா – நடுத்தெருவில் நிற்கும் கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவின் கணவர்தான் கோபி என்கிற உண்மையை ராதிகா அறிந்து கொண்டதுமே கோபியை விட்டு விலக நினைக்கிறார். கோபிக்கு ராஜேஷ் எவ்வளவோ பரவாயில்லை என நினைத்து மீண்டும் ராஜேஷுடன் ராதிகா சேர்ந்து வாழ நினைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மன்னித்து ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற அனைத்து உண்மையையும் ராதிகா அறிந்துகொள்கிறார். அதாவது குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் பாக்கியாவுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் கோபி காட்டி ராதிகாவிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
சமையலில் அசத்தும் ஆலியா மானசா, மூக்கு பிடிக்க சாப்பிட்ட சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!
பாக்கியாவின் கணவர்தான் கோபி என்பதை ராதிகா அறிந்துகொண்டதுமே கோபியை விட்டு விலகி விடலாம் என நினைக்கிறார். ஆனால், கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து உனக்காகத்தான் இவ்வளவும் செய்தேன் என கூறி ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ராதிகாவின் அம்மாவும் ராதிகாவையும் கோபியையும் எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். இந்த விஷயத்தை முதலிலேயே ராதிகாவிடம் சொல்லியிருந்தால் ராதிகாவிற்கு இவ்வளவு பெரிய மன கஷ்டம் வந்திருக்காது என கோபியிடம் கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியா தான் என் ,மனைவி என்பதை கூறினால் ராதிகா என்னை விட்டு சென்று விடுவார் என்கிற பயத்தில்தான் அவ்வாறு செய்தேன் என கோபி கூறுகிறார். ஆனால், கோபி மீது ராதிகா கொலைவெறியில் இருக்கிறார். தனது மனைவியின் நெருங்கிய தோழியை எப்படி இந்த அளவுக்கு ஏமாற்ற முடியும் என கோபியின் மீது ராதிகாவிற்கு ஒரு கெட்ட எண்ணம் வந்துவிட்டது. ஏற்கனவே ராஜேஷ் ராதிகாவை விட்டு சென்றதில் இருந்து ராதிகா மன வேதனையில் இருந்தார். தற்போது கோபியும் நம்மை ஏமாற்றி விட்டதாக மனமுடைந்து விட்டார். கோபிக்கு ராஜேஷ் எவ்வளவோ பரவாயில்லை என்று ராதிகா ராஜேஷுடன் சேர்ந்து வாழ நினைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.