வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி? அதிர்ச்சியில் சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியை கண்ணம்மாவுடன் சேர்த்து வைப்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் சௌந்தர்யாவுக்கு பாரதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல வரும் கனவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பாரதி கண்ணம்மா
மிக நீண்ட எபிசோடுகளுக்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது வழக்கமான பாணிக்கு திரும்பி இருக்கிறது. இந்த சீரியலில் இதுவரை மருத்துவமனை, ஆப்பிரேஷன், உடல் உறுப்பு தானம் என சில சமூக கருத்துக்களை சொல்லி விட்டு மீண்டுமாக பாரதி மற்றும் கண்ணம்மா பற்றிய காட்சிகளுடன் நகர ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில், பாரதி தான் தன்னுடைய உண்மையான அப்பா என்ற உண்மையை லட்சுமி அறிந்து கொண்டது இப்போது கண்ணம்மாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், தனது மகளை நினைத்து பெருமைப்படுகிறார் கண்ணம்மா.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்டு – போலியான குடும்பத்தை உருவாக்கி ராதிகாவை ஏமாற்றும் கோபி?
மறுபக்கத்தில், வெண்பாவுக்கு அவரது அம்மா மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். ஆனால், எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் வெண்பா அவரது அம்மாவை சமாதானப்படுத்த முயலுகிறார். இருப்பினும், வெண்பாவின் பருப்பு அவரது அம்மாவிடம் வேகவில்லை. இப்போது, பாரதியுடன் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் வெண்பா.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடில் பாரதியை நினைத்து கவலை கொள்ளும் சௌந்தர்யா அவரை, கண்ணம்மாவுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த கதையின் அடுத்தகட்ட கதைக்களத்தில், பாரதி பற்றிய நினைப்பில் உறங்கிப்போகும் சௌந்தர்யா, பாரதி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கனவு காண்கிறார். இதை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போகும் அவர் அப்படி எதுவும் நடந்து விடுமோ, ஒருவேளை அது வெண்பாவாக இருக்குமோ என்று எண்ணுவது போல அடுத்த கட்ட காட்சிகள் அமைய இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.