ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் கோபி – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் கோபி - ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் கோபி - ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் கோபி – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்காக ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபியை ராதிகா பார்த்து விடுவது போன்றும், இவர் ஏன் நமக்கு முன்னால் இங்கே வர வேண்டும் என நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு ராதிகா வருங்கால கணவரையும் அழைத்து வருகிறேன் என கூறியிருந்தார். இந்த தடவை மட்டும் பாக்கியா டீச்சர் வீட்டுக்கு நீங்கள் வரவில்லையெனில் உங்களிடம் பேசவே மாட்டேன் என ராதிகா கூறுகிறார். ராதிகாவுடன் எப்படி பாக்கியா வீட்டிற்கு செல்வது என ராதிகாவை ராமமூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு வரவிடாமல் தடுக்க கோபி நெஞ்சு வலிப்பது போல நடிக்கிறார். பின்பு ராதிகா நீங்கள் ரெஸ்ட் எடுங்கள் நான் மட்டும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறேன் என கூறுகிறார்.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2 சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ராமமூர்த்தி தாத்தாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வருகிறது. தாத்தாவிற்கு பழையபடி பேச்சு வந்ததால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், கோபி மட்டும் ராமமூர்த்தி தாத்தா உண்மையை கூறி விடுவாரோ என பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார். ராதிகா வீட்டிற்கு வரும் போது என்னை பார்த்து விட்டால் என்ன செய்வது என பதட்டத்திலேயே இருக்கிறார். முன்பக்க வாசல் வழியே கூட வராமல் திருட்டுத்தனமாக பின்பக்க சுவரேறி குதிக்கிறார். கோபி பின்பக்க சுவரேறி குதிப்பதை பாக்கியா பார்த்து விட்டு எதற்காக இப்படி செய்கிறார் என சந்தேகப்படுகிறார்.

Exams Daily Mobile App Download

பின்பு, உங்கள் அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் என கோபியை வலுக்கட்டாயமாக கூட்டி வருகிறார். கோபியை பார்த்ததும் ராமமூர்த்தி தாத்தா முகத்தை திருப்பி கொள்கிறார். பின்பு, கோபிக்கு ஆசீர்வாதம் செய்கிறார். அப்போது வீட்டில் பாக்கியாவும், கோபியும் சேர்ந்து இருக்கும் படியான புகைப்படம் இருப்பதை கோபி பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த புகைப்படத்தை மட்டும் ராதிகா பார்த்து விட்டால் அவ்வளவு தான் எப்படியாவது அந்த புகைப்படத்தை ஒளித்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். கோபி ராதிகாவிடம் மாட்டிக் கொள்வாரா அல்லது இந்த முறையும் தப்பிக்க தான் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!