ஓமைக்ரான் தொற்றால் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறோம் – பில்கேட்ஸின் “ட்விட்டர்” பதிவு!
உலகத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான MICROSOFT நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ். ஓமைக்ரான் வைரஸ் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
“ட்விட்டர்” பதிவு:
உலக பணக்காரர்கள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ள MICROSOFT நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் சமீபத்தில் ஓமைக்ரான் தொற்று பற்றி ட்விட்டரில் பதிவிட்டுருந்தார். அதில் ஓமைக்ரான் தொற்றால் அனைத்து நாட்டு மக்களும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. ஓமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3% சதவீதத்தில் இருந்து 73% சதவீதமாக ஓமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல்!
இதுவரைக்கும் காணாத அளவிற்கு ஓமைக்ரான் வைரஸ் பேரழிவை ஏற்படுத்தும். கொரோனா தொற்று பரவியது போல இந்த ஓமைக்ரான் தொற்றும் உலக நாடு முழுவதும் முழுமையாக பரவி விடும். தொற்று முழுமையாக பரவிய பின் அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று இன்று வரை நம்மால் யூகிக்க முடியவில்லை. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்றால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தொற்று பரவலால் நான் விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ரத்து? அறிக்கை தகவல்!
கொரோனாவின் புது அவதாரமான ஓமைக்ரான் தொற்று மிகவும் வேகமாக பரவும் ஆற்றலை உடையது. அதனால் டெல்டா வைரஸை போல் பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகி விடும். மேலும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் பல பேர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வெளியே செல்லும் போது முக கவசம், சமூக இடைவெளி போன்ற அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.