தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ரத்து? அறிக்கை தகவல்!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் விடுமுறைகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
விடுமுறைகள் ரத்து
கடந்த மே மாதம் முதல் நிலவி வரும் கொரோனா 2ம் அலை தொற்று காரணமாக தமிழகத்தில் இந்த கல்வியாண்டு தாமதமாக துவங்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. அதே போல 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கும் நவ.1 முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பித்தது.
தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய தகவல் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இந்நிலையில் இந்த கல்வியாண்டு பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமான நடைமுறையின்படி 2021-22 அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுமுறைகள் தொடங்கும். ஆனால் இப்போதோ பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த விடுமுறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனமழை மற்றும் தீபாவளி கொண்டாட்டங்கள் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளின் கூற்றுப்படி, விடுமுறை தொடர்பான கோரிக்கைகள் எழுப்பப்பட்டால் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படலாம் என தெரிகிறது.
டிச.25 முதல் சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை – புதிய கட்டுப்பாடுகள் அமல்! அரசு நடவடிக்கை!
என்றாலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் விரைவில் துவங்க இருப்பதால் ஆசிரியர் குறுகிய காலத்திற்குள் பாடத்திட்டங்களை முடித்து பொது தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக தமிழக பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டு பண்டிகை விடுமுறை ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.