தமிழகத்தில் வரும் பிப்ரவரி 23, 24ம் தேதிகளில் மாபெரும் ஐடி மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும்படியும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஐடி மாநாடு:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்பத் துறையானது மந்த நிலைக்கு செல்வதால் முன்னணி ஐடி நிறுவனங்களும் பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். மேலும், இந்த ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தல் விகிதத்தையும் பாதியாக குறைத்து இருக்கிறது. இதனால், புதிதாக உயர் படிப்பை முடித்து வரும் மாணவர்கள் ஐடி துறைக்குள் நுழைவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
RITES நிறுவனத்தில் ரூ.2,00,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!
இந்நிலையில், பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து வெளியேறும் அனைத்து ஐடி நிறுவனங்களும் தமிழகத்தில் கோவை, மதுரையை நோக்கி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். இந்நிலையில், பிப்ரவரி 23,24 ஆம் தேதி தமிழகத்தில் மாபெரும் ஐடி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் ஐடி மாநாட்டில் கலந்துகொண்டு மாணவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.