எட்டாவது ஊதிய குழுவிற்கான அறிவிப்பினை எதிர்பார்த்து மத்திய அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எட்டாவது ஊதிய குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் எட்டாவது ஊதியக்குழுவினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
RITES நிறுவனத்தில் ரூ.2,00,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் பிட்மன்ட் காரணி 3.65 மடங்காக உயர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக உயர வாய்ப்பிருக்கிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதிய குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது எட்டாவது ஊதியக்குழுவை ஊழியர்களுக்கு அமைப்பது தொடர்பான எந்த பரிசீலனையும் தற்போது வரையிலும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.