தமிழகத்தில் அக்.15ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
சென்னையில் அக்.15ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
தமிழக பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – ஆயுத்த பணிகள் தீவிரம்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து அக்.15ம் தேதி சென்னை இராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 8 வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம்.
Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=amTkOGyCYAM
முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடைபெறவுள்ள முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லாமல் அயல் நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக பதிவு செய்து தரப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்