பிக் பாஸ் வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் சிபி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற நாளுக்கான டாஸ்கில் போட்டியாளர் அக்க்ஷராவை தாக்கும் விதமாக தகாத வார்த்தைகளை பேசி அவரை காயப்படுத்தின சிபி சந்திரனுக்கு வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
கடந்த 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5வது சீசன் 14 போட்டியாளர்களுடன் களம் கண்டு வருகிறது. ஆரம்பம் முதலே ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களுக்கு இடையே உருவான சண்டை, மற்றும் மோதல் போக்குகள் இன்றளவும் காணப்பட்டு வருகிறது. இது இப்போது சரியாகும் அப்போது சரியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த பிரச்சனைகள் எதுவும் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. பொதுவாக எல்லா பிக்பாஸ் சீசனிலும் இது போன்ற பிரச்சனைகள் ஆரம்ப எபிசோடுகளில் காணப்பட்டு வந்தாலும் அது போக போக சரியாகி விடும்.
பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பரினா – உறுதி செய்த துணை நடிகை!
ஆனால் இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி மட்டும் எப்போதும் யுத்தக் களமாகவே காட்சியளிக்கிறது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான எபிசோடிலும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் ஒரே அடிதடி தான். இன்று நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர் நிரூப், அக்க்ஷராவை பிடித்தததாக சொல்லி ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார். இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் சிபி இப்போது சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார்.
பாரதியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கண்ணம்மா? சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
அதாவது ஆரம்பம் முதலே சிபி மற்றும் அக்க்ஷராவுக்கு இடையே இருந்து வரும் தவறான புரிதலை மனதில் வைத்து சிபி, அக்க்ஷராவை பழிவாங்குவதாக சொல்லப்பட்டு வருகிறது. இது தவிர இந்த பிரச்சனையில் போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி கெட்ட வார்த்தையில் திட்டிக் கொள்கின்றனர். இப்போது அக்க்ஷரா மீது எந்த மனத்தாங்கலும் இல்லை என கூறும் சிபி நிரூப்பிற்கு சாதகமாக பேச வரும் போது கெட்ட வார்த்தை உபயோகிப்பது தவறு என ரசிகர்களின் பரவலான கருத்து கூறுகிறது. இந்த பிரச்சனை காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் சிபி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.