Vijay Tv Bigg Boss 5 Promo | அம்மாவை பற்றி கூறி அனைவரையும் நெகிழ செய்த அமீர் – கண்ணீர் சிந்தும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த பிரீஸ் டாஸ்க் வர உள்ள நிலையில், அமீர் தன் வாழ்கை பாதையை பற்றி கூறுவதால் அனைத்து போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தி அழுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ப்ரோமோ வெளியீடு:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தனது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வீட்டில் உள்ள 10 போட்டியாளர்களில் யார் வெற்றியை பெறுவார்கள் என்பது குறித்து மிகவும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தற்போது 80வது நாளை கடந்து போட்டி மிகவும் சுவாரஸ்யமான பகுதிக்கு வந்துள்ளது. முதல் சீசனில் இருந்து அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கவர்ந்த பிரீஸ் டாஸ்க் தான் இந்த வாரம் முழுவதும் வர இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களை அப்படியே உறையச் சொல்லி மீண்டும் மீண்டும் ரீபீட் செய்து, ஸ்லோ மோஷனில் செயல்களை செய்ய சொல்லி பிக் பாசின் உத்தரவு வரும்.
மேடையில் ரசிகர்கள் முன் கண்ணீர் விட்டு அழுத நடிகை சாய் பல்லவி – காரணம் இதுவா!
இந்த டாஸ்க் நடக்கும் போது நடுவில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவார்கள். இத்தனை நாட்கள் கழித்து போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினரை பார்ப்பதால் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். இதற்கான ப்ரோமோக்கள் வெளி வந்துள்ள நிலையில், தற்போது 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை டாஸ்க் செய்தனர். வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள சஞ்சீவ் மற்றும் அமீர் இந்த டாஸ்கில் கலந்து கொள்ள காரணத்தால் இன்று இவர்களுக்கு மட்டும் இந்த டாஸ்க் நடக்கிறது.
வைதேகிக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்த பாட்டி – விஜய் டிவி புது சீரியல் “வைதேகி காத்திருந்தாள்” ப்ரோமோ!
அதில், நடன இயக்குனர் அமீர் தனது வாழ்க்கையை பாதையை கூறிவருகிறார். தான், அம்மா, அண்ணன் மட்டும் தான் குடும்பம் என்றும் அப்பாவை தான் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார். தான் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. தான் ஒரு சிறிய லோக்கல் சேனலில் ஆடிய போது அதை ஊர் முழுவதும் கூறி வந்த தனது அம்மா, தான் தற்போது தமிழ்நாட்டிலேயே பெரிய சேனலில், பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அதை பார்க்க இல்லை என்று கூறியுள்ளார். இதனை மிகவும் வருத்தத்துடன் அமீர் கூறுவதை பார்த்து அனைத்து போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.