வைதேகிக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்த பாட்டி – விஜய் டிவி புது சீரியல் “வைதேகி காத்திருந்தாள்” ப்ரோமோ!
விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் வைதேகி எங்கே இருக்கிறாள் என தெரியாமல் பாட்டி வருத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
வைதேகி காத்திருந்தாள்:
விஜய் டிவி சீரியல்கள் பல TRPயில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் மக்களிடம் விறுவிறுப்பை அதிகரிக்க பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது தான் “வைதேகி காத்திருந்தாள்” சீரியல். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ப்ரஜின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சரண்யா களமிறங்கி இருக்கிறார். இந்த இருவரும் மக்களிடம் பிரபலமான நடிகர்கள் என்பதால் சீரியல் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாதாரண பெண்ணாக இருந்து பாரதியின் கண்ணம்மாவாக மாறிய ரோஷினி – அவரே சொன்ன தகவல்!
இந்த சீரியலில் பணக்கார வீட்டில் இருந்து சிறு வயதில் வைதேகி சென்றுவிட்டார். பின் தான் யார் என்ற உண்மை தெரியாமல் அவர் வளர, பாட்டி வைதேகி நினைப்பாகவே இருக்கிறார். அவர் வைதேகியை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்க, வைதேகியாக நடிக்க நிஜ வைதேகியே வருகிறார். இந்த சீரியலை தற்போது பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர் சிவசேகர் இயக்கி வருகிறார்.
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் ரேஷ்மாவிடம் சண்டையிடும் மதன் – “அபி டெய்லர்” மேக்கிங் வீடியோ!
இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாட்டி வைதேகியை நினைத்து போட்டோவை பார்த்து அழுது கொண்டிருக்க போட்டோ கிழே விழுந்து உடைகிறது. உடனே பாட்டி அதை எடுத்து பார்க்க அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. அதனால் வைதேகிக்கு எதாவது ஆபத்து வருமா என வைதேகி வருத்தப்படுகிறார். மறுபக்கம் வைதேகியை வளர்த்தவர் பணம் கேட்டு வைதேகியை தள்ளிவிட அவர் கிழே வைத்திருந்த அருவாமனையில் கையை வைக்கிறார். அதனால் அவருக்கும் காயம் ஏற்படுகிறது. பாட்டி பேத்தியின் பாசப்பிணைப்பை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.