‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இசைவாணி வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 7வது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட இசைவாணி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 50 நாட்கள் முடிவடைந்துள்ளது. தற்போது வீட்டிற்குள் 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் வீட்டில் மூன்றாவது வாரத்தில் எலிமினேட் ஆன அபிஷேக் ராஜா தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார். அவர் வைல்ட் கார்ட் என்ட்ரி என்பதால் இறுதி சுற்றிற்கு செல்ல மாட்டார். இந்நிலையில் கடந்த வாரம் இசைவாணி மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். அவர் போட்டிகளில் நன்றாக விளையாடி வந்தார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகா சங்கமத்துடன் இணையும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
ஆனால் மக்களை கவரும் அளவிற்கு அவர் விளையாடவில்லை. மேலும் மற்ற போட்டியாளர்களிடம் அவர் சரியான நட்பை வளர்க்கவில்லை. மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் அவர் இருந்ததால் கூட மக்களிடம் வெறுப்பை சம்பாரிக்க காரணமாக இருந்தது. அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் கானா பாடகராக இருந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்த 7 வாரத்தில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
டாக்டர் பட நடிகையுடன் இணைந்த ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் – வைரலாகும் வீடியோ!
அதன்படி அவர் வாரத்திற்கு ஒரு லட்சம் என ஏழு வாரத்திற்கு ஏழு லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார். இவர் தொடக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் போது வெற்றியாளராக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது. ஆனால் அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி மக்களை என்டர்டெயின்மென்ட் செய்ய தவறிவிட்டார். அதனால் தான் வீட்டில் இருந்து சீக்கிரமாக வெளியேற்றப்பட்டார். ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய மாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.