விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ஒதுக்கப்பட்ட இசைவாணி – மனம் திறந்த பிரபலம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி ஏழாவது வாரத்தில் வெளியேறிய இசைவாணி, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் என்னை ஒதுக்கி தான் வைத்தார்கள் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது 55 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதன் பின் முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து சில காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் நாதியா சங், மூன்றாம் வாரத்தில் அபிஷேக், நான்காம் வாரத்தில் சின்ன பொண்ணு , ஐந்தாம் வாரத்தில் சுருதி ஆறாம் வாரத்தில் மதுமிதா வெளியேற்றப்பட்டனர். ஏழாவது வாரத்தில் இசைவாணி வெளியேறினார். எட்டாவது வாரத்தில் ஐக்கி பெர்ரி வெளியேறி இருக்கிறார்.
குழாயடி சண்டையாக மாறிய ‘பிக்பாஸ்’ வீடு, ப்ரியங்கா & தாமரை இடையே வெடித்த மோதல் – ப்ரோமோ ரிலீஸ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் இசைவாணி பல நிகழ்ச்சிகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது வீட்டை பற்றியும், மற்ற போட்டியாளர்கள் பற்றியும் பல நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறார். இசைவாணி வெளியேறிய பின் உங்களிடம் நாங்க நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நீங்க செய்யவில்லை என பல கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் வீட்டில் நீங்க ஒதுக்கப்பட்டதாக சொன்னீர்கள் என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் ஒன்றை அளித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா? ரீல்ஸ் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்!
அதில் அனைவரிடமும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழகி கொண்டு இருந்தேன். அதுமட்டுமல்லாமல் யாராவது தனியாக இருந்தால் அவர்களோடு பேசி கலகலப்பாக வைத்துக் கொண்டேன். வீட்டின் முதல் நாள் அனைவரிடமும் பேசிவிட்டு பாட்டு பாடி கொண்டே இருந்தேன் ஆனால் அவர்கள் குரூப்பாக மாறிய பின் நான் ஒதுக்கப்பட்டேன். பின் எப்படியும் எல்லாரும் விளையாட தான் வந்திருக்கோம் சண்டைகள் வர தான் செய்யும். அதனால் எல்லாரிடமும் விலகியே இருந்தேன் என பதில் அளித்து இருக்கிறார்.