குழாயடி சண்டையாக மாறிய ‘பிக்பாஸ்’ வீடு, ப்ரியங்கா & தாமரை இடையே வெடித்த மோதல் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில், தற்போது போட்டியாளர்கள் ப்ரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு இடையே உருவாகிய பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் ஏகப்பட்ட கலவரங்கள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பிக்பாஸ் ப்ரோமோ
ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி, ஏகப்பட்ட கலாட்டாக்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீசன் துவங்கி தற்போது 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே இன்னும் ஒரு சரியான புரிதல் உருவாகவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் முதல் நாள் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கும் 2 பேர், அடுத்த நாள் எபிசோடில் அடித்து பிடித்து சண்டையிட்டு வருவது பார்ப்பவர்களுக்கு சற்று எரிச்சலை உண்டாக்குகிறது.
கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா? ரீல்ஸ் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்!
அந்த வகையில் இன்றைய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான முதல் 2 ப்ரோமக்களிலும் ப்ரியங்கா மற்றும் தாமரை செல்வியின் சண்டை காட்சிகள் மட்டுமே அதிகம் இடம்பிடித்திருந்தது. இப்போது ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ ஒன்று வெளியாகி, ஒரு குழாயடி சண்டையை கண் முன் நிறுத்தியுள்ளது. அதாவது, போட்டியாளர் சிபியை காட்டி, கத்தியை எடுத்து குத்தி விட்டு இது டாஸ்க் என்று சொல்லுவியா என ப்ரியங்காவிடம் கேட்கிறார் தாமரை செல்வி.
தொடர்ந்து ப்ரியங்கா தன்னைப் பற்றி இப்படியெல்லாம் பேச வேண்டும் என நினைத்து கொண்டு பேசுகிறார் என தாமரை சொல்ல, தாமரைக்கு ஒரு பிரச்சனை வரும் போது ஒரு மாதிரியாக பேசுகிறார், அதுவே வேறு ஒருவருக்கு பிரச்சனை என்றதும் வேறு மாதிரியாக பேசுவது எனக்கு புரியவில்லை என ப்ரியங்கா சொல்கிறார். தொடர்ந்து ப்ரியங்கா மீது ஆயிரம் குற்றங்கள் இருக்கும் போது என்னை ஏன் கடுப்பாக்கி இப்படி பேச வைக்கிறார் என கூறி விட்டு தாமரை அழுவதை போல சில காட்சிகள் புதிய ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது.