அபிஷேக்கிடம் பற்ற வைத்த நிரூப், ப்ரியங்கா & ராஜு ஒன்னா சேந்தாச்சு – பிக் பாஸ் ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ள அபிஷேக்யிடம் நடந்த விஷயங்களை பற்றி போட்டியாளர்கள் அனைவரும் கூறுவது போல் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாதி கிணறு கடந்து அதாவது கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கி போட்டி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியும் தினமும் ஏதவது புதுப்புது சண்டையோடு மிகவும் பரபரப்பாக செல்கிறது. இன்று வார இறுதி நாளான சனிக்கிழமை எபிசோட் என்பதால் கமலின் தரிசனம் போட்டியாளர்களுக்கு கிடைக்கும். இந்த வாரம் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஆக உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் வைக்கப்பட்டது. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு டாஸ்க் நடத்தப்பட்டது.
தனது மகன் துருவனுடன் வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்த போட்டியில் வென்ற பி அணியினருக்கான லக்ஜூரி பட்ஜெட் பரிசுகள் வித்தியாசமான முறையில் வழங்கப்பட்டது. பகடை காய்களை உருட்டி அதில் விழும் நம்பர்களின் பெட்டிகளில் உள்ள பொருட்கள் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்படி எடுக்கும் போது ஒரு பெட்டியில் இருந்து அபிஷேக் ராஜா வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் உள்ளே வந்த அபிஷேக்யிடம் ப்ரியங்கா, ராஜு சண்டையை பற்றி அனைவரும் கூறுகின்றனர்.
அதவாது, நேற்று இரவு ப்ரியங்கா அனைவரும் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு தூங்குமாறு கூறினார். ஆனால் ராஜு மட்டும் தாமரையிடம் கொடுத்து அனுப்ப இவர்களுக்குள் சண்டை மூண்டு விட்டது. இதனால் ப்ரியங்கா அழுதுவிட ராஜு சமாதானம் செய்து, இருவரும் நட்பு பாராட்டிக் கொண்டனர். இதை பற்றி அபிஷேக்கிடம் தெரிவித்து வரும் போது, ராஜு,”நேத்து தான் பிரண்ட்ஸ் ஆனோம், அதுக்குள்ள வந்துட்டியேடா” என்று கூற, அதற்கு நிரூப் அவன் என்ன சொல்றன் தெரியுதா” “நாங்க சேந்தாச்சு நீ விலகி நில்லுன்னு சொல்றான்” என்று கூறுவது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.