தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – 35 வகையான பயிற்சி! முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - 35 வகையான பயிற்சி! முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - 35 வகையான பயிற்சி! முக்கிய அறிவிப்பு!தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - 35 வகையான பயிற்சி! முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – 35 வகையான பயிற்சி! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக அப்பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகையான பயிற்சிகள் அளிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி:

தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் அம்மக்கள் பல சலுகைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நவ.22 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி!

அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலன் காக்கும் அடுத்த நடவடிக்கையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் கீழ் பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகையான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் – மிஸ் பண்ணாம படிங்க!

அதன்படி தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மொத்தம் 1464 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக ஆங்கில இலக்கணம், செயல்வழி கற்றல் முறை, புதிய பாட திட்டம், ஆங்கில பேச்சாற்றல் அறிவுத்திறன் வகுப்பு, கணினி பயிற்சி ஆகிய பயிற்சிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!