பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 18 பேரை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பினார். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கை போட்டியாளரும் அடங்குவார். இந்நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்கள் அவர் அந்த வீட்டில் இருந்த நிலையில் திடீரென அந்த வீட்டில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியே சென்றார் என பிக்பாஸ் தெரிவித்தார்.
திருமணம் குறித்து மனம் திறந்த “பாக்கியலட்சுமி” இனியா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
ஆனால் இது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அவர் தாமரை மீதிருந்த கோவத்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை எறிந்ததாலும், அதனால் மற்ற போட்டியாளர்கள் அதிருப்தி அடைந்ததால் அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என ஒரு சிலர் கூறுகின்றனர்.
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்புவின் ‘மாநாடு’ – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் என்ன செய்கிறார் என ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் இன்னும் 2, 3 நாட்களில் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்படுவார் என பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர் தற்போது ரோடில் உடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உடை வாங்கி அணிந்து விடுவது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்த்த பலர் பிக்பாஸில் உங்களை மிஸ் செய்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.