வெண்பாவிற்கு திருமணத்தை நடத்தி வைக்கும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது வெண்பா ரோஹித் திருமணம் குறித்த காட்சிகள் வர இருக்கிறது. சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா வெண்பாவிற்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்த நிலையில் தற்போது TRPயில் சரிவை சந்தித்து வருகிறது. கதையில் எந்த திருப்பமும் கொண்டு வராமல் இருந்த நிலையில் தற்போது புது விதமாக கதை கொண்டு செல்லப்படுகிறது. லக்ஷ்மிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்ததால் ஹேமாவிடம் உண்மையை சொல்லிவிடுவார் என்பதால், ஹேமாவை பாரதி பள்ளிக்கே அனுப்பாமல் வைத்திருக்கிறார். இந்நிலையில் வெண்பா ரோஹித் கல்யாண பேச்சு மீண்டும் தொடங்கி இருக்கிறது.
அதன் படி, வெண்பா கல்யாணத்தை நிறுத்த பல வேலைகளை செய்ய ஆனால் சௌந்தர்யாவும் கண்ணம்மாவும் வெண்பாவின் கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என நினைக்கின்றனர். காரணம் பாரதி மனதை கெடுப்பது வெண்பா தான் என்பதால் கண்டிப்பாக வெண்பாவிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கிடையே வெண்பா விஷ ஊசி போட்டு கண்ணம்மாவை கொல்ல நினைத்தது தெரிந்தும் கூட வெண்பாவிற்கு நல்லது நடக்க நினைப்பது பெரிய லாஜிக் பிரச்சனையாக இருக்கிறது.
கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கெஞ்சும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
Exams Daily Mobile App Download
மேலும் வெண்பா, ரோஹித் அனாதை என்பதால் திருமணம் வேண்டாம் என சொல்ல சௌந்தர்யா ரோஹித்தை தத்து எடுக்க போகிறார். இப்படி எல்லாம் கதை கொண்டு செல்ல படுவதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். DNA டெஸ்ட் எடுத்து சீக்கிரமாக கதையை முடிக்க வேண்டும் என்பதே பலரின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை புரிந்து கொள்ள பாரதி எதாவது முடிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.