“பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகரின் அம்மா மருத்துவமனையில் அனுமதி – அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவிற்கு பெரிய தலைவலியாக இருந்த துர்கா கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன் ராஜ் தேவசகாயத்தின் அம்மா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரே புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா நடிகர்:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இந்த வாரம் முழுவதும் வர இருக்கிறது. அந்த வகையில் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்வது தொடங்கி வெண்பாவின் அம்மா ஷர்மிளாவின் மாஸ்டர் பிளான் எல்லாம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவை பிரித்து 10 ஆண்டுகளாக அவரது வாழ்க்கையில் கபடி விளையாடி வருபவர் வெண்பா. ஆனால் வெண்பாவிற்கே தலைவலியாக இருந்தவர் தான் துர்கா.
Exams Daily Mobile App Download
துர்கா கதாபாத்திரம் கண்ணம்மாவை கொல்லும் ரவுடியாக அறிமுகமாகி அதன் பின் கண்ணம்மாவின் நல்ல குணத்தை தெரிந்து கொண்டு கண்ணம்மாவிற்கு ஆதரவாக வெண்பாவை எதிர்க்க தொடங்கினார். ஆனால் கொடூரமான வில்லி வெண்பா துர்காவை பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் அடைந்தது வைத்துள்ளது போல கதையில் காட்டப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் துர்காவாக நடிகர் பிரவீன் ராஜ் தேவசகாயம் நடித்து இருந்தார். அவர் அதற்கு முன்னதாக விஜய் டிவி ஈரமான ரோஜாவே சீரியலில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஜீ தமிழின் புதிய சீரியலில் களமிறங்கும் நடிகர் ஆர்யன் – கதாநாயகியாக செம்பருத்தி சீரியல் நடிகை!
இந்நிலையில் அவருக்கு நந்தினி என்ற சீரியல் நடிகை உடன் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரவீன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி குறிப்பிடவில்லை. இந்நிலையில் அவருடைய அந்த பதிவில் ரசிகர்கள் அவர் அம்மா சீக்கரம் குணமாக வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.