ஜீ தமிழின் புதிய சீரியலில் களமிறங்கும் நடிகர் ஆர்யன் – கதாநாயகியாக செம்பருத்தி சீரியல் நடிகை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யன். அவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் புதிய சீரியல் ஒன்றில் களமிறங்க இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் புதிய சீரியலில் அவருடன் ஜோடியாக நடிக்க போகும் நடிகை பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஆர்யன்:
விஜய் டிவி சீரியல்களில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி தற்போது மக்களின் மனம் கவர்ந்த நடிகர் நடிகையாக இருக்கின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் ஆர்யன். அவர் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விகாஷ் சம்பத் என்பவர் நடித்து வருகிறார். ஆர்யன் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷாபனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
தொழிலை தொடங்க சொன்ன கோபி, மனம் உருகி பேசிய பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
இந்நிலையில் சீரியலில் இருந்து விலகிய ஆரியன் தற்போது ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலின் பெயர் கதை உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஆர்யனுக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார். வில்லி யார் என்பது குறித்த முழு விவரம் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலை செம்பருத்தி சீரியல் ப்ரொடக்சன் தான் இந்த சீரியலையும் இயக்க இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் தேசிய விருது வாங்கிய முன்னணி நடிகை அர்ச்சனா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரியனுக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியலின் கன்னட வெர்சன் பாரு என்ற சீரியலின் கதாநாயகி மோக்ஷிதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிகை சுபத்ரா நடிக்க இருக்கிறார். அவர் பல சீரியலில் வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்யன் முதன் முதலில் லீட் ரோலில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.