பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி அடையாளம் தெரியாமல் மாறிய கண்மணி – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகரன் சீரியலை விட்டு விலகினாலும் அவரது நடிப்பாலும், அழகாலும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்றவராக உள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கண்மணி மனோகரன்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியலில் மக்கள் மனதில் ட்ரெண்டாகிய சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீரியலை விட்டு ஒவ்வொருவராக வெளியேறிய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் கடுப்பை உண்டாகியது. அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் அடுத்த கட்ட முயற்சியான சினிமா வாய்ப்பிற்க்காக சீரியலை விட்டு வெளியேறினார்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!
அதன் பிறகு அகிலன் விலகியதை தொடர்ந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோகரன் விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார். இவ்வாறு சேனல் விட்டு சேனல் மாறி புது சீரியலில் லீட் ரோல் செய்வதாக தகவல் வெளியிட்டிருந்தார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரப்போகும் ‘அமுதாவும்’ என்ற புது சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோ மூலம் உறுதியாகியது.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் கண்மணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. அதில் கண்மனி பச்சை நிற ஜாக்கெட், கத்தரிப்பூ நிற கலர் புடவை, தலையில் கனகாமரம் பூ அணிந்து, கைகளில் சிவப்பு நிற வளையல்களுடன் மிகவும் அழகாக இருந்தார். அதைப்பார்த்த பலரும் பழைய 80ல் உள்ள ஹீரோயினை போலவும், பார்ப்பதற்க்கு கண்ணே பட்டுவிடுவது போலவும் இருப்பதாக ரைஸ்கர்கள் கமெண்ட் செய்து வருகிரறார்கள். மேலும், பியூட்டிஃபுல், கார்ஜியஸ், கியூட், லவ்லி என கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.