கண்ணம்மாவுடன் சந்தோசமாக வாழ தொடங்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’அடுத்து வரும் திருப்பங்கள்!
பாரதி கண்ணம்மா தொடரில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றாக ஒரே வீட்டில் வருகின்றனர். தற்போது தொடரில் அடுத்து வரும் திருப்பிங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்ட திருப்பங்கள்:
பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று வருகிறது. இதனால் சின்னத்திரையின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கதை இருப்பதாலும் நடிகர்கள் சிறப்பாக நடிப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது கண்ணம்மா மற்றும் பாரதிக்கு இடையிலான விவாகரத்து வழக்கில் நீதிபதி உத்தரவிட்ட காரணத்தால் இருவரும் ஒன்றாக எலியும், பூனையுமாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
ODI கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம் – புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்!
பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் பழைய படி சேர்ந்து சந்தோசமாக வாழ் வேண்டும் என்றும் சௌந்தர்யா உட்பட குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் பாரதி பிரிய வேண்டும் என்ற முடிவில் விடாப்பிடியாக இருந்து வருகிறார். தற்போது வெண்பா அஞ்சலிக்கு செய்த துரோகத்தை தெரிந்து வெண்பா மீது கடும் கோபத்தில் இருந்தாலும், கண்ணம்மா உடன் சேர வேண்டும் என்று நினைக்கவில்லை என்பது போல், தற்போது காட்சிகள் வருகின்றது. இதனால் கண்ணாவுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு தான் பாரதி இருந்து வருகிறார்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம்! மாணவர்கள் கோரிக்கை!
ஆனால் ரசிகர்கள், பாரதி கண்ணம்மா மற்றும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து மீண்டும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கருத்துக்களை வைத்து வருகின்றனர். தற்போது பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், அருண் கண்ணம்மா வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருப்பது போல் உள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி, மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும் மகிழ்ச்சியாக வாழ தொடங்க போகிறார்கள் என்று தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆனந்தத்தில் உள்ளனர்.