தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம்! மாணவர்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம்! மாணவர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம்! மாணவர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம்! மாணவர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என மாணவர்கள் சிலர் கோரி உள்ளனர். இதனால் 3வது அலை பரவலை தடுத்து நிறுத்த முடியும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை:

இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே கொரோனா பரவல் சற்று கட்டுப்படுத்தப்பட்டு தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்தது. அதனால் ஏகப்பட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

டிச.12 முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு விளக்கம்!

தமிழகத்திலும் கடந்த நவ.1ம் தேதி 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த சில பயணிகளுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தொற்று மேலும் சிலருக்கும் உறுதியாகி உள்ளது. இதனால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பள்ளி, கல்லூரிகளை மூடுவது குறித்தும் மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டன. தமிழகத்திலும் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

RRB குரூப் D 2019 தேர்வு பிப்.23 முதல் தொடக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

மேலும் 3வது அலையில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவு பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!