கொரோனாவின் BF.7 வகை பரவல் பாதிப்பு எதிரொலி – புதிய நாசி வழி தடுப்பு மருந்து!
கொரோனா வைரஸின் பரவல் மீண்டும் உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக நாசி வழி தடுப்பு மருந்து குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
நாசி வழி தடுப்பு மருந்து:
கொரோனா தொற்று தானாக உருமாறக்கூடிய வகையில் மாற்றம் அடைந்து தற்போது வரை அதன் தாக்கம் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் சில காலம் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தென் கொரியா, ஜப்பான், சீனா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் BF.7 வகை பரவல் மிகவும் அதிவேகத்தில் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் அந்நாடுகளில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான நாசி வழி தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயரப்போகும் கட்டண விலை .. இனி பார்த்து தான் பேசணும் போல – தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்!
Exams Daily Mobile App Download
இந்த மருந்து தனிப்பட்ட முறையில் தான் கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, இன்று முதல் CoWIN தளத்தில் இதற்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பூஸ்டர் டோஸ்சாக எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.