இந்தியாவில் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது மறைந்த வேளாண் விஞ்ஞானி தமிழகத்தை சேர்ந்த எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
பாரத ரத்னா
இந்தியாவில் சமுதாய வளர்ச்சிக்காக தொண்டாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளில் பாரத ரத்னா விருது இந்தியாவிலேயே பெரிய விருதாக கருதப்படுகிறது.
NTRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது, ஊதிய… விவரங்கள் இதோ!
அந்த வகையில் இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உயரிய விருதான பாரத ரத்னா விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார். அதில் மறைந்த வேளாண் விஞ்ஞானி தமிழகத்தைச் சேர்ந்த எம் எஸ் சுவாமிநாதனுக்கு விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது மகள் நித்யா ராவ் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.