மாதம் ரூ.5000 பென்சன் பெற சிறந்த திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!!
மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒய்வுகாலத்திற்கு ஏற்ற ஒன்று அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும். இந்த திட்டத்தில் இணையும் பயனாளர்களுக்கு மாதம் ரூ. 5000 பென்சன் கிடைக்கும்.
அடல் பென்சன் யோஜனா:
நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களை போல ஓய்வு காலத்திற்கு பின்னர் பென்சன் பெற பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒய்வு காலத்திற்கு ஏற்ற திட்டங்களில் ஒன்று அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும். இந்த திட்டம் மூலமாக அரசு ஊழியர்களுக்கு நிகரான பென்சன் கிடைக்கும். அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
கொரோனா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் சேரலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து இந்த திட்டத்திற்கான கணக்கை தொடங்கலாம். இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்தவர்களுக்கு 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், அவர் அறிவித்துள்ள நாமினிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்தால் தினசரி 7 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதன் படி மாதம் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும் அவ்வாறு 42 வருடங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். தே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 64 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முதலில் நீங்கள் அமைப்பு சாரா நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். மேலும் இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து விட்டால் உங்களது மொபைல் எண்ணிற்கு குறுந்செய்தி வரும். பணம் செலுத்திய பின்னர் உங்களது பேலன்ஸ் தொகை குறித்த விவரங்களும் SMS மூலமாக வரும்.