கொரோனா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசுகள் விரைவாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர்களுடனான காணொலி ஆலோசனையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை இந்தியாவில் நிலவுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் இந்தியா அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பரவி வரும் வைரஸ் தொற்றால் ஏராளமானோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து சிரமப்பட்டனர்.
அரசுப் பணிகளில் 50,000 காலியிடங்கள் நிரப்புதல் – தெலுங்கானா அரசு துவக்கம்!
போதிய மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தடுப்பு பணிகள் குறித்து மாநில அரசுகளுக்கு வழிகாட்டி தொற்றை குறைப்பதற்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார். தற்போது இந்தியாவில் தடுப்பூசிகள் பயனாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
சில மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் கொரோனா தொற்றின் 80% பாதிப்புகள் 6 மாநிலங்களில் இருந்து பதிவாகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசுகள் விரைவாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர்களுடனான காணொலி ஆலோசனையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.