பெல் நிறுவன 150 காலிப்பணியிடங்கள் – சம்பளம் ரூ.55,000/-
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Trainee Engineer – I மற்றும் Project Engineer – I ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Trainee Engineer – I பணிக்கு என 80 பணியிடங்களும், Project Engineer – I பணிக்கு என 70 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு AICTE அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.E அல்லது B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 06 மாதம் முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- Trainee Engineer – I பணிக்கு அதிகபட்சம் 28 வயது எனவும், Project Engineer – I பணிக்கு அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Trainee Engineer – I பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை என்றும், Project Engineer – I பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.177/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
BEL விண்ணப்பிக்கும் விதம்:
இந்த BEL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க திறமை மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 03.08.2022 டன் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.