பெல் நிறுவனத்தில் Security Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நவம்பர் 1 கடைசி நாள்!
Security Officer அல்லது Assistant Security Officer பணியிடங்களை நிரப்ப பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 01.11.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பெல் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Assistant Security Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- 01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வயதானது அதிகபட்சம் 32 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- SSC Officer of Captain rank from Indian Army / equivalent rank from Navy / Air force/Class I Gazetted Officer of Central Paramilitary Organisations இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Security Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 – ரூ.1,40,000/- மற்றும் Assistant Security Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
BECIL ஆணைய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.31,000/- || உடனே விரையுங்கள்
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.bel-india.in/ என்ற இணைய முகவரி மூலம் 01.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.