2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடர் – BCCI தலைவர் கங்குலி அறிவிப்பு!
தற்போது வரை மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடக்காத நிலையில், இனி வரும் காலத்தில் அதிக வீராங்கனைகள் சேரும் பட்சத்தில் 2023 முதல் மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மகளிர் ஐபிஎல்:
கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பங்கு ஐபிஎல் போட்டிகளை சாரும். 20 ஓவர்களில் நடந்து முடிந்து விடும் இந்தப் போட்டிகளின் போது குறைந்த நேரத்தில் அதிக சுவாரஸ்யத்தை அளிக்கும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் கடும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடந்தது.
10, 12ம் வகுப்புகளுக்கு ஐசிஎஸ்இ & ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியீடு – வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ, மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதுவரை ஆடவர் கிரிக்கெட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட லீக் போட்டிகளான ஐபிஎல், இனி மகளிர் பிரிவுக்கு தொடங்கப்படும். இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியது.
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் லீக் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்.நிச்சயமாக இதுவும் மிகப்பெரிய வெற்றியை அடையும். வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் ஐபில் பிளே ஆஃப் பின் போது மகளிர் ஆட்டங்கள் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.