பிக் பாஸ் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்த நபர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனை பற்றி அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் அல்டிமேட்:
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடந்துள்ளது. இதில் கமல் வெளியிட்ட முதல் ப்ரோமோவிலேயே வீட்டின் சுவர்கள் இன்னும் அதிகமாக எழுப்ப வேண்டும் என்றும், வருபவர்கள் அதையும் தாண்டி விடுவார்கள் என்றும் கூறினார். இதனால் முதல் சீசனில் வந்த பரணி தான் வீட்டின் சுவரை எகிறி குதிக்க முயற்சித்தார் என்பதால் அவர் வரலாம் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அதேபோல், ஹரீஷ் கல்யாணும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சுவர் ஏறி குதித்து தான் வந்தார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியாக அறிமுகமாகும் ஜீ தமிழ் நடிகை அருள்ஜோதி – ரசிகர்கள் ஷாக்!
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஹரீஷ் மற்றும் பரணி இருவரில் ஒருவரை மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இரண்டு பேருமே இல்லை, இதனால் வைல்டு கார்டு என்ட்ரியாக இவர்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரலாம் என்று கருத்து நிலவி வருகிறது. அதேபோல், கன்னிகா சினேகனும் வர வாய்ப்பிருப்பதாக பலரும் கூறிவந்தனர். இதனால் அடுத்து வரும் வாரங்களில் வீட்டிற்குள் புதிதாக யார் செல்வார்கள் என்று பலரும் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குக் வித் கோமாளி’ ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி – இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. வீட்டின் கார்டன் ஏரியா முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, யாரும் இல்லை என்பதால் மீண்டும் வந்த வழியாகவே குரங்கு வெளியேறி விட்டது. போட்டியாளர்கள் அனைவரும் வீட்டின் உள்ளே இருந்ததால் குரங்கு வந்ததை யாரும் அறியவில்லை. குரங்கு ஒன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.