மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஊதிய உயர்வு
மத்திய அரசாங்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 31% ஆக உயர்த்தி அறிவித்ததையடுத்து ஊழியர்களுக்கான HRA மற்றும் TA ஆகியவையும் கணிசமாக உயர்வடைந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு முதல் 4 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA தொகை இந்த ஆண்டு ஜூன் மாத தவணையுடன் கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) தற்போது 28% மாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி – கல்வித்துறை உத்தரவு!
அதாவது செலவினத் துறையின் உத்தரவின் படி, ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 25% க்கு அதிகமாக இருப்பதால் இந்த HRA தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமும் கணிசமான உயர்வை காணும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு ஆலோசித்து வந்த அரசு இது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறும் போது, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை அரசு பரிசீலிக்கவில்லை. ஆனால் 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அனைத்து வகையான அரசு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக 2.57 என்ற பிட்மெண்ட் பாக்டர் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.