தமிழகத்தில் பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி – கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படிக்க அரசு தரப்பில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெற்றோரை இழந்த மாணவர்கள் படிக்க ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
நலத்திட்ட நிதியுதவி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாற்றங்கள் நடைபெறவுள்ளது. மக்கள் பலர் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக பதினோறாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை அரசு பள்ளிகளில் முன்பை காட்டிலும் அதிக அளவில் நடந்துள்ளது. காரணம் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போழுது அரசு பள்ளிகளில் அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
திறமையான ஆசிரியர்கள், ஹை-டெக் லேப், நவீன ஆய்வு கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், இது போன்று பல்வேறு வசதிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தவித செலவும் இல்லாமல் சிறந்த தரமான படிப்புகள் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனவர்களுக்கு எளிமையான முறையில் பாடங்களை சொல்லி கொடுக்க சிறந்த, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
விலையில்லா நோட்டு, புத்தகங்கள், புத்தகபை, கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில் பெட்டிகள், மாணவர்களுக்கு சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, சைக்கிள், மடிகணினி, மாணவர்கள் இடைநிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்கத்தொகை, கல்வி உதவி தொகைகள், குடும்ப தலைவரை இழந்தவருக்கு நிதி உதவி போன்ற சலுகைகள் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.