ஜூன் 17 முதல் பார்கள், பேருந்துகள் செயல்பட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூன் 17 முதல் பார்கள், பேருந்துகள் செயல்பட அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 17 முதல் பார்கள், பேருந்துகள் செயல்பட அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 17 முதல் பார்கள், பேருந்துகள் செயல்பட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

கேரளாவில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

கொரோனா 2 ஆம் அலை காரணமாக கேரளாவில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து இன்று (ஜூன் 17) முதல் தளர்வுகள் அளிக்கப்படவுள்ளது. அதன் படி வாரந்தோறும் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் மாநிலத்தில் தளர்வுகள் கொடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிதி நிறுவன கடன் தவணை (EMI) வசூல் கூடாது – கலெக்டர் உத்தரவு!

மேலும் வார இறுதியில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று முதல் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளின் படி,

  • அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் தினசரி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படும்.
  • அரசு நடத்தும் குளிர்பான விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்.
    அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளின் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.
  • இந்த பகுதிகளுக்கு மட்டும் போக்குவரத்து வசதி அனுமதிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • திங்கள் முதல் வெள்ளி வரை அக்ஷயா கேந்திரங்கள் திறந்திருக்கும்.
  • மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி அடிப்படையில் செயல்பட அனுமதிக்கப்படும்
  • தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • செயலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி அடிப்படையில் செயல்படும்.
  • ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும்
  • வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டுமே தொடர்ந்து செயல்படும்.
  • திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20 ஆக நீடிக்கும்.
  • சமூக கூட்டங்கள் அல்லது பொது நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது.
  • வீட்டு விநியோகங்களுக்கு மட்டுமே உணவகங்கள் திறக்கப்படும்.
  • மால்கள், சுற்றுலா, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.
  • பார்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!