பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி காலியாக உள்ள Scientific Officers பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் வழியாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
பாபா அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
BARC பணியிடங்கள்:
வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Scientific Officers பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
BARC கல்வித் தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc / M.Tech / M.S போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியம். மேலும் GATE தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022..!
BARC வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பாபா அணு ஆராய்ச்சி மைய ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.55,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மைய தேர்வு முறை:
- GATE Score
- Online Exam
- Interview
பொறியியல் பட்டதாரியா? – NLC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு | முழு விவரங்களுடன்..!
பாபா அணு ஆராய்ச்சி மைய கட்டணம்:
இப்பணிக்கு பொது மற்றும் OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 500 ரூபாய் மற்றும் SC / ST / Women / PWD / DODPKIA விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
Bhabha Atomic Research Centre விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாளாக 11.02.2022 அன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் (11.02.2022) இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவு பெறுவதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளவும்.