அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்வுக்கு அகிலன், பாரதி, சௌந்தர்யா என ஒவ்வொருவராக வந்து சேர இறுதியில் கண்ணம்மாவும், லட்சுமியும் வருவதை கண்டு சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார். மறுபக்கத்தில் பாரதியை சர்பிரைஸ் செய்ய வேண்டும் என வெண்பாவும் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

பாரதி கண்ணம்மா

இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடில் அஞ்சலி சீமந்த நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அகில், அஞ்சலியின் அம்மாவை கலாய்த்து விட்டு, புடவையை செலக்ட் செய்ய அஞ்சலிக்கு உதவி பண்ணுகிறார். பின்பு அஞ்சலிக்கு நகைகளை வாங்கி வந்து ஆச்சரியப்படுத்துகிறார் அகில். அங்கு வரும் பாக்கியலட்சுமி, அந்த நகைகளை பார்த்து உங்களுக்கு பெரிய மனசு தம்பி என பாராட்டுகிறார். அகில் அங்கிருந்து சென்றதும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என அஞ்சலி வருத்தப்படுகிறார்.

“பாரதி கண்ணம்மா” வெண்பா மதம் குறித்து ரசிகரின் பதிவு – பரினாவின் பதிலடியால் சர்ச்சை!

பின்னர் அஞ்சலியின் வீட்டுக்கு வரும் பாரதி, காரில் இருந்தபடியே சௌந்தர்யா வரும் வரையும் காத்திருக்கலாம் என யோசிக்கிறார். பின்னர் வெண்பாவும் காரில் வந்து கொண்டிருக்க, வேணு, சௌந்தர்யா, ஹேமா அனைவரும் அஞ்சலியின் வீட்டுக்கு வருகிறார்கள். இவர்களை கண்ட பாரதி, ஏன் லேட்டா வந்தீங்க என கேட்ட்டுவிட்டு, வெண்பா அனுப்பிய போட்டோவை காட்டி அவர்களை வெறுப்பேற்றுகிறார். பின்னர் சௌந்தர்யா குடும்பத்தினரை காணவில்லை என சண்முகமும், பாக்கியலட்சுமியும் வருத்தப்பட சௌந்தர்யா குடும்பத்தினர் உள்ளே நுழைகிறார்கள்.

அஞ்சலி புடவை கட்டி, மேக்கப் போட்டு சீமந்த நிகழ்வுக்கு ரெடியாக அதை வீடியோ எடுக்கிறார் அகில். அங்கு வரும் பாரதி, அகிலை வாழ்த்திவிட்டு ஹேமா எனக்கு ரொம்ப முக்கியம். ஆனா அவ நம்மளுடைய ரத்த வாரிசு இல்லை. ஆனால் அஞ்சலிக்கு பிறக்கப்போகும் குழந்தையை கண்டு அம்மா சந்தோசப்படுவாங்க என கூற, அவள் உனக்கு பொறந்த பொண்ணு பாரதி என மனதுக்குள் நினைக்கிறார் அகில். பின்னர், கண்ணம்மாவும், லட்சுமியும் அங்கு வருகிறார்கள்.

‘பாக்கியலட்சுமி’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் சீரியல் ப்ரோமோ கமெண்ட்கள்!

மாடியின் மீது நின்று கொண்டு, சௌந்தர்யாவும், ஹேமாவும் பேசிக்கொண்டிருப்பதை கண்டு சிரிக்கிறார் பாரதி. அப்போது கண்ணம்மாவும், லட்சுமியும் உள்ளே நுழைய இவ எதுக்கு இங்க வர்றா, அவ வந்தா குழந்தை பற்றி கேட்பாளே, இவளை யார் இங்க வர சொன்னது என அவர்களை கண்டு அதிர்ச்சியாகிறார் சௌந்தர்யா. பின்னர் கண்ணம்மாவை கண்ட ஹேமா, சமையல் அம்மா வந்துருக்காங்க என கூற, பாரதி கீழே பார்த்து முறைக்கிற படி இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!