‘பாக்கியலட்சுமி’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் சீரியல் ப்ரோமோ கமெண்ட்கள்!
தமிழ் சீரியல்கள் தான் பொழுதுபோக்கின் முன்னணி நிலையில் உள்ள நிலையில் அந்த சீரியலை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதே சீரியல்களின் அன்றைய ப்ரோமோ தான். அந்த வகையில் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ மற்றும் அதற்கு ரசிகர்களின் கமெண்டுகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.
ரசிகர்களின் கமெண்டுகள்:
சீரியல்கள் என்பது முன்னொரு காலத்தில் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்கள் மட்டும் பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் சமீப காலமாக சீரியல்கள் அனைத்தும் திரைப்படத்தையே மிஞ்சும் அளவிற்கு உள்ளதால் சீரியல்களுக்கான ரசிகர்களும் அதிகரித்து உள்ளனர். மேலும், வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் அளவிற்கு உள்ளது. ஊரடங்கு காலத்திலும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்ததால் இளம் வயதினரும் தற்போது சீரியல்களை பார்க்க தொடங்கி விட்டனர்.
இருப்பினும், தினசரி சீரியலில் வர இருக்கும் காட்சிகள் ப்ரோமோவாக காலை முதல் ஒளிபரப்பாகும். இந்த ப்ரோமோவை பார்த்து சீரியல்களை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த சீரியல்களின் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பாக தொடங்கிய உடன் இதற்கு பலரும் ருசிகரமான கமெண்டுகளை அளித்து விடுகின்றனர். இன்றைய ப்ரோமோக்கான கமெண்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்த ஜீ தமிழின் பிரபல சீரியல் – கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் மூர்த்தியின் அம்மாவிற்கு உடல்நலம் இல்லாமல், பேச்சு, மூச்சு இன்றி இருப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரசிகர் ஒருவர் தனத்துக்கு குழந்தை பிறக்குற வரைக்குமாவது உயிர கைல பிடிச்சுக்கோங்க. வெண்ணைய் திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதையா ஆயிடாம….. என கூறியுள்ளார்.மற்றொரு ரசிகர் கண்ணன பாக்காம லக்ஷ்மி அம்மா சாகமாட்டாங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் இந்த பாட்டிக்கு எதுவும் ஆகலயா என்றே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.
பாக்யலட்சுமி:
கோபியை ராதிகாவுடன் பார்த்த செல்வி இதை பாக்கியாவிடம் சொல்வது போலவும், இதனால் கோபி மீது சந்தேகம் வருவது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரைமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பல பெண்கள் இப்படித்தான் கணவனை மலைபோல் நம்பி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுல இருந்தும் கோபி தப்பிச்சிடுவாரு அதான நடக்க போகுது என்று கூறியுள்ளார். மற்றொ ரசிகர் பாக்ய அம்மாவுக்கு டவுட் வந்துடுச்சி இனிமே ஆட்டம் ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் எப்படி இருந்தாலும் கோபி மாட்டமாட்டாரு அதான் நடக்கும் என்று கூறியுள்ளார்.
“பாரதி கண்ணம்மா” வெண்பா மதம் குறித்து ரசிகரின் பதிவு – பரினாவின் பதிலடியால் சர்ச்சை!
பாரதி கண்ணம்மா:
அஞ்சலிக்கு வளைகாப்பு நடக்க இருக்கும் நிலையில், அதற்கு எப்படி போவது என்று வெண்பா திட்டம் தீட்டுவது போலவும் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெண்பா வில்லத்தனம் ஸ்டார்டிங்கா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இத இன்னுமாடா விட்டு வச்சிருக்கீங்க என்று கேட்டுள்ளார். இதுக்கு வேற வேலையே இல்லையா அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கறதுதான வேலையாக ஒன்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். எல்லா சீரியலும் வில்லிக்கு சாதகமாகவே அமைகிறது என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
ராஜா ராணி 2:
போலி போலீசாரிடம் சந்தியா வாக்குவாதம் செய்வது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீன் எல்லாம் பல படங்கள பாத்தாச்சு வேற ஏதாவுது புதுசா ட்ரை பண்ணுங்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாக்குள்ள இப்படி ஒரு அறிவா சூப்பர் என்று கூறியுள்ளார். நீ என்னதான் பண்ணாலும் சரவணன் உன்னை நம்பமாட்டான் சந்தியா என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். ஒரு சிலர் பரவாயில்லை விழிப்புணர் தரும் சீன் என்று கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
நாம் இருவர் நமக்கு இருவர்:
மாயன் தன் பெற்ற அம்மாவிடம் வளர்ப்பு அம்மாவிற்காக பேசுவது போல் இன்றைய ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் சரியா நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் தான் ஏதே உருப்படியா இருக்கு மற்ற எல்லா சீரியலும் ஒரே ஸ்டோரிதான் என்று பதிவிட்டுள்ளார். இனி மாயன மாறன் இடையே மோதல் ஸஸ்டார்ட்டிங் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வளர்த்த தாய்க்காக பெற்ற தாயிடம் சண்டை போடாதே மாயா என்று ஒருவர் கூறியுள்ளார்.
ரோஜா:
இன்றைய ரோஜா சீரியலின் ப்ரோமோவை பார்த்து ரசிகர் ஒருவர் என்ன நடந்தாலும் செம்பகம் ரோஜாவின் வீட்டுக்கு வரப்போவதில்லை.. இந்த டைரக்டர் எப்பயும் போல பல்ப் தான். எப்பயும் போல செம்பகம் தப்பி ஓடத்தான் போறாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் சூப்பர் மாஸ், என்றும் கூறியுள்ளனர்.