கண்ணம்மாவை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு கிளம்பும் பாரதி, சோகத்தில் குடும்பம் – இன்றைய எபிசோடு!

0
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய கோர்டுக்கு கிளம்பும் பாரதி, சோகத்தில் குடும்பம் - இன்றைய எபிசோடு!
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய கோர்டுக்கு கிளம்பும் பாரதி, சோகத்தில் குடும்பம் - இன்றைய எபிசோடு!
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு கிளம்பும் பாரதி, சோகத்தில் குடும்பம் – இன்றைய எபிசோடு!

கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்காக வீட்டில் ஒரு பெரிய பாடம் எடுத்துவிட்டு கோர்ட்டுக்கு கிளம்புகிறார் பாரதி. அங்கு கண்ணம்மா இன்னும் வரவில்லை என பாரதி பதட்டத்தில் இருக்க கடைசி நேரத்தில் அவர் வந்து நிற்கிறார்.

பாரதி கண்ணம்மா

இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி இருக்கும் பாரதி, அவரை ஸ்கூலில் சந்தித்து கோர்ட்டில் சந்திப்பதாக சொல்லி விட்டு செல்கிறார். இப்போது, வீட்டில் சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் பாரதியை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இது நம்ம பாரதி இல்ல, நமக்கு ஆறுதல் சொல்ல நாம இருக்கோம், ஆனா கண்ணம்மா பாவம் அவ என்ன செய்வா என வேணு புலம்பி கொண்டிருக்கிறார்.

அம்ரிதாவிடம் தனது காதலை சொல்லும் எழில், ஈஸ்வரியிடம் சண்டையிடும் பாக்கியா – சீரியல் அடுத்த எபிசோட்!

மறுபக்கத்தில் பாரதி, கோர்ட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி கூறும் போது கண்ணம்மா தவறானவளாக சித்தரிக்கப்படுவாள் என கூறி சௌந்தர்யா வருத்தம் அடைகிறார். பிறகு ஹேமா அவரது வீட்டு பாடத்தை பற்றி பாரதியிடம் சந்தேகம் கேட்கிறார். பாரதி, ஹேமாவுக்கு கணக்கு சொல்லி கொடுக்க நான் சமையல் அம்மாவிடம் டுயூஷன் போகவா என ஹேமா கேட்கிறார். இப்போது பாரதியின் முகம் மாறுகிறது.

தொடர்ந்து ஹேமாவுக்கு பிடிக்காதது போல பாரதி சமையல் செய்து வந்து ஊட்டி விட எனக்கு பிடிக்கவில்லை என கூற சமையல் அம்மா நன்றாக சமைப்பார்கள் என ஹேமா சொன்னதை நினைத்து பார்க்கிறார் பாரதி. அடுத்து வேணு, நியூஸ் பேப்பரில் இருந்த ராசி பலனை வாசிக்கிறார். பிறகு ஹேமா ஸ்கூலுக்கு கிளம்புகிறார். அப்போது சௌந்தர்யா டல்லாக இருப்பதாக ஹேமா கூற பாரதி வந்து, சௌந்தர்யாவுக்கு பிடித்த தலைவலி இன்றோடு போகப்போகிறது என நக்கலாக கூறுகிறார்.

ஜீ தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மா கல்யாணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட ஆர்யன், ஷபானா – வைரல் வீடியோ!

இன்றைக்கு கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து வாங்குவதாக பாரதி சொல்ல நாங்களும் கோர்ட்டுக்கு வருவோம் என சௌந்தர்யா சொல்கிறார். இப்போது கோர்ட்டுக்கு வரும் பாரதியிடம், உங்க மனைவி வரவில்லையா என வக்கீல் கேட்டுக்கொண்டிருக்கும் அவரை காணவில்லை என பாரதி கோபப்பட அப்போது சௌந்தர்யா வருகிறார். நீதிமன்றம் துவங்க எதிர் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என சொல்லி விட்டு கண்ணம்மா, கண்ணம்மா என கூப்பிட கண்ணம்மா வெளியே இருந்து வருகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!