அம்ரிதாவிடம் தனது காதலை சொல்லும் எழில், ஈஸ்வரியிடம் சண்டையிடும் பாக்கியா – சீரியல் அடுத்த எபிசோட்!
பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்து வர இருக்கும் நாட்களில் எழில் தனது காதலை அம்ரிதாவிடம் சொல்வது போலவும், அதற்கு அவருக்கு கிடைக்க இருக்கும் பதில் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.
எழிலின் காதல்:
பாக்கியலட்சுமி தொடரில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தனி தனியாக கிளை கதைகளை கொண்டு செல்கிறது. பாக்கியா தனது வீட்டில் இருக்கும் எதிர்ப்பையும் மீறி, கேட்டரிங் தொழிலில் சாதிக்க நினைக்கிறார். கோபியோ தனது காதலியுடன் சேர நினைக்கிறார். இவர்களது மூத்த மகன் செழியன் தான் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜெனியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் ஒடிந்துள்ளார். இரண்டாவது மகன் எழில் தான் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார்.
புது கண்ணம்மாவுடன் இணைந்த ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்!
ஆனால் அதற்கு வீட்டில் யாருடைய ஒத்துழைப்பும் கிடைக்காமல் இருக்கிறது. ஆனால் பாக்கியா மட்டும் தனது மகனின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக உதவி செய்கிறார். இந்நிலையில், எழில் எதிர்பாராத விதமாக அம்ரிதா என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எழில் அம்ரிதாவை விரும்புகிறார். ஆனால் அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். ஆனால் அம்ரிதா ஏற்கனேவே திருமணம் ஆனவர் என்பதை அம்ரிதா எழிலிடம் தெரிவிக்கிறார். அதையும் கடந்து எழில் அம்ரிதாவை காதலிக்கிறார்.
ஜீ தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மா கல்யாணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட ஆர்யன், ஷபானா – வைரல் வீடியோ!
எழில் தனது காதலை அம்ரிதாவிடம் சொல்வதற்கு முன்னர், தனக்கு குழந்தை இருப்பதை அம்ரிதா சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எழில் பரவாயில்லை நாம் மூன்று பேரும் ஒன்றாக இருந்து கொள்வோம். நான் குழந்தையை ஏற்றுக் கொள்கிறேன் என்று எழில் கூறுகிறார். இன்னொரு புறம், வீட்டில் பாக்கியாவிற்கும், அத்தை ஈஸ்வரிக்கும் சண்டை வருகிறது. இத்தனை வருடங்களாக எதிர்த்து பேசாத பாக்கியா, தற்போது ஈஸ்வரியுடன் பதிலுக்கு சண்டை இடுகிறார். இதனால் பாக்கியாவின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.