ஜீ தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மா கல்யாணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட ஆர்யன், ஷபானா – வைரல் வீடியோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும் ரேஷ்மா திருமண நிகழ்ச்சியில் புதிதாக திருமணம் ஆன ஷபானா, ஆர்யன் ஜோடி கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்ச்சி:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வரும் ரேஷ்மா மற்றும் சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர் என்ற பல முகங்களை கொண்ட மதன்பாண்டியன் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது. மதனும் அதே தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பல வருடங்களாக இந்த தொடரில் ஒன்றாக நடித்து வந்த நிலையில், காதலிக்க தொடங்கியுள்ளனர்.
ஹேமா, லட்சுமியுடன் ஒரே வீட்டில் வாழும் பாரதி & கண்ணம்மா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பங்கள்!
இந்நிலையில், ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷபானா, இவரது பூர்வீகம் கேரளா. ஆனால் மும்பையில் பிறந்து வளர்த்துள்ளார். ரேஷ்மாவும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர்களுடன் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வந்த சைத்ரா மற்றும் நக்ஷத்ரா ஆகிய 4 பேரும் நெருங்கிய தோழிகள். பல முறை இவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் இவர்களது நட்பு மிகவும் பிரபலம். சைத்ரா திருமணத்தில் இவர்கள் நால்வரும் செய்த கலாட்டாக்கள் ட்ரெண்டிங்கில் சென்றது.
TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்பு..!
தற்போது கடந்த 11ம் தேதி தான் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் நடிகர் ஆர்யனுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ரேஷ்மா கலந்து கொண்டது பகிரப்பட்டது. அதேபோல், தற்போது ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்தில் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.