முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், அடுத்ததடுத்து பல திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருக்கிறதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் முதல் இடத்தில் பாரதி கண்ணம்மா உள்ளது. அந்த சீரியலில், முதல் பாகத்தில் அம்மா இல்லாமல் வளரும் கண்ணம்மா எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அதை எல்லாம் பொறுப்பெடுத்தாமல் பாரதி கண்ணம்மாவை துரத்தி துரத்தி காதலிப்பதையும், வெண்பா பாரதியை காதலிப்பது குறித்தும், பின் திருமணம் செய்து கொண்ட பாரதி கண்ணம்மாவின் காதல் காட்சிகள் என அழகாக காட்டப்பட்டது. கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பாரதி வெளியே அனுப்ப வைராக்கியத்துடன் கண்ணம்மா இருக்கிறார்.
பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார். அப்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. அதில் ஒரு குழந்தையை சௌந்தர்யா எடுத்துக் கொண்டு வந்து அனாதை குழந்தை என பாரதியிடம் சொல்லி வளர்க்கின்றனர். பாரதியும் பாசத்துடன் அந்த குழந்தையை வளர்க்கிறார். இந்நிலையில் 8 வருடங்களுக்கு பின்னர் கதையை மீண்டும் தொடங்குகின்றனர். இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
குழந்தைகள் இருவரும் வளர்ந்து உள்ளனர். கண்ணம்மாவின் மகள் தான் லட்சுமி என தெரியாமல் பழகிய பாரதிக்கு, உண்மை தெரிந்து விடுகிறது. பின் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரிய வருகிறது. வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போது பாரதி திருந்தி கண்ணம்மாவுடன் வாழ விருப்பமாக இருப்பது போல ப்ரோமோ ஒன்று காட்டப்பட்டுள்ளது. அப்போ வெண்பாவிற்கு திருமணம் ஆகாதா?
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இது கனவாக தான் இருக்கும் என கமெண்ட் செய்தாலும் அடுத்தடுத்து அனைத்து உண்மைகளும் வெளியாகி வருவதால் ஒரு வேளை இந்த சீரியல் முடியப் போகிறதா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. அதனால் ஏதாவது ஒரு சீரியல் முடிந்தால் தான் அந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியும் அதனால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தயவு செய்து இந்த பாரதி கண்ணம்மா சீரியல் சீக்கிரம் முடிக்கவும் டைரக்டர் முடிவு என்ன செய்ய வேண்டும் என்று ஒரே கவலையில் இருக்கிறார் யாரோ ஒருவரை சாகடித்து விட்டு சுபம் போடுங்கள் idarkku மேலும் பொறுமை இல்லை