சுயநினைவு இல்லாமல் இருக்கும் கண்ணம்மா, பயத்தில் வெண்பாவை அழைக்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதியை சந்தோஷப்படுத்த புது விதமான உணவுகளை சமைத்து பழகுகிறார். பின்னர் கண்ணம்மா தூக்கத்தில் இருந்து எந்திரிக்கவில்லை என பயந்து லட்சுமி வெண்பாவிற்கு போன் செய்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா இரட்டை குழந்தைகள் பற்றி எதோ வழி கிடைத்திருக்கு என கண்ணம்மா சொன்னதை நினைத்து பார்க்கிறார். பின் என்ன நடந்திருக்கும் என குழப்பத்தில் இருக்க வேணு சௌந்தர்யாவை அழைத்து என்ன யோசிக்கிற என கேட்கிறார். அப்போது சௌந்தர்யா கண்ணம்மாவை பற்றி நினைக்கிறன் பாரதிக்கு லக்ஷ்மிக்கு சமைத்து கொடுத்ததற்கு இவ்வளவு கோவமாக இருக்கிறான். இதுவே ஹேமா கண்ணம்மா பெற்ற மகள் என தெரிந்தால் என்னவெல்லாம் செய்வான் என சொல்கிறார்.
அப்போது வேணு கண்ணம்மாவிற்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என கேட்க, கண்டிப்பா துளசி சொல்லிருக்க மாட்டா, அப்போ வெண்பா சொல்லிருப்பாளா என கேட்க, அவளுக்கு தான் இரட்டை குழந்தை பற்றி தெரியாதே என சௌந்தர்யா சொல்கிறார். மறுபக்கம் வெண்பா போனில் எதோ பார்த்துக் கொண்டிருக்க சாந்தி என்ன என்று கேட்கிறார். சமையல் வீடியோ பார்க்கிறேன் என சொல்ல, எதற்கு அம்மா என்னை வேலையை விட்டு நிறுத்த போறீங்களா உங்களுக்கு என்ன வேண்டும் என சொல்லுங்க நான் செய்து தருகிறேன் என சொல்ல இல்லை என வெண்பா சொல்கிறார்.
ஜோடியாக வீடு திரும்பிய சந்தியா & சரவணன், ஏற்றுக் கொள்ளும் சிவகாமி – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
நான் பாரதிக்கு சமைத்து கொடுக்க சமையல் கத்துக்குறேன் என சொல்ல முதலில் கல்யாணம் பண்ணுங்க நான் அப்பறம் சமைக்கிறேன் என சொல்கிறார். பாரதி தன்னை அழைத்து சமைத்து கொடுத்த விவரத்தை சொல்ல சாந்தி சந்தோஷத்தில் ஸ்வீட் செய்ய செல்கிறார். ஒரு பக்கம் லட்சுமி தூங்கி எழுந்து கண்ணம்மாவை எழுப்ப அவள் எந்திருக்கவே இல்லை. லட்சுமி பயந்து போய் பாரதிக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. அதன் பின்னர் வெண்பாவிற்கு லட்சுமி போன் செய்கிறார்.
வெண்பா உடனே வந்து கண்ணம்மாவை பார்த்துவிட்டு விஷ ஊசியை செலுத்த இருக்கிறார். அப்போது பார்த்து கண்ணம்மா சரியாக எழுந்துவிடுகிறார். உடனே லட்சுமி வெண்பாவிற்கு நன்றி சொல்ல, டீ போட்டு தருகிறேன் என கண்ணம்மா சொல்கிறார். லட்சுமியை பால் வாங்கி வரும்படி சொல்லி அனுப்ப, பாவம் லட்சுமி யாருமே எங்க வீட்டிற்கு வந்ததில்லை என சொல்கிறார். அவளுடைய தங்கச்சி வந்திருந்தால் அவளுக்கு சந்தோசமாக இருக்கும்.
புதிய சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!
இனிமேல் பாரதி எல்லாம் உன்னை பார்க்க மாட்டான். நீ உன் குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என வெண்பா சொல்கிறார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என கண்ணம்மா கேட்க, அதான் சொன்னேனே என்னை திருமதி பாரதி என கூப்பிட வேண்டும் எங்கே கூப்பிடு என சொல்ல, கண்ணம்மா மறுக்கிறார். உடனே கண்ணம்மா வெண்பாவிற்கு தட்டில் கண்ணம்மா டீ கொண்டு வந்து கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.