மனம் திருந்தி வீட்டுக்கு திரும்பிய சந்தியா & சரவணன், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவிற்கு எதுவும் ஆகாமல் இருப்பதை தெரிந்து கொண்ட சரவணன் சந்தோஷத்தில் இருக்கிறார். பின் சந்தியா தன் மீது தவறு எதுவும் இல்லை என விளக்கமாக சொல்கிறார். பின் சரவணன் சந்தியாவும் சேர்ந்து வீட்டிற்கு செல்கின்றனர்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் உங்களுக்கு மட்டும் எதாவது நடந்திருந்தால் நான் உயிரோடு இருக்கமாட்டேன் என சொல்கிறார். சந்தியா பேருந்தில் இருந்து இறங்கி போன் பேசும் போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது என சொல்கிறார். உடனே சந்தியா எனக்கு இந்த வீட்டை விட்டு போக விருப்பமில்லை, அத்தை, அர்ச்சனா, ஆதி, பார்வதி என அனைவரிடமும், எனக்கு மன வருத்தம் இருக்கு. ஆனால் அவை அனைத்தும் உங்களுடைய சப்போர்ட் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என சந்தியா சொல்கிறார்.
சரவணனுடன் என்ன பிரச்சனை என கேட்க சரவணன் விவாகரத்து பத்திரத்தை ஏற்கனவே நான் பார்த்து விட்டேன் எனவும், அது பற்றி உங்க தோழி அனிதாவிடம் பேசியதையும் நான் கேட்டு விட்டேன் என சொல்கிறார். அதிலிருந்து என்னால் வெளிய வர முடியவில்லை என சொல்ல, சந்தியா அழுது கொண்டே இது என்ன என்று என்னிடம் ஒரு 2 நிமிடம் கேட்டிருக்கலாம் என சொல்கிறார். உடனே தப்பை உணர்ந்து சந்தியாவும் சரவணனும் கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
பின் குடும்பத்தினர் என்ன நடந்தது என தெரியாமல் வருத்தத்தில் இருக்க, கவிதா வந்து தகவல் ஏதாவது தெரிந்ததா என கேட்கிறார். அப்போது, சரவணன் சந்தியாவும் ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர். எல்லாரும் பாசத்துடன் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கின்றனர். குளித்துவிட்டு வாங்க என சொல்லி உள்ளே அனுப்பி, அக்கம் பக்கத்தினர் சந்தியா படித்த பெண்ணாக இருந்தாலும் நல்ல அடக்கமான பெண்ணாக இருக்கிறார். உனக்கு இனிமேல் என்ன கவலையும் வேண்டாம் சந்தியா உன் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்வாள் என சொல்லி கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.