சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா - இன்றைய
சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கோவிலில் சௌந்தர்யாவை சந்தித்த கண்ணம்மா பாரதி தனக்கு பிரசவம் பார்த்தது பற்றி பேசுகிறார்.பின் இரட்டை குழந்தைகள் பற்றி நானே கண்டுபிடிக்கிறேன் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா சௌந்தர்யாவை கோவிலுக்கு வர சொல்கிறார். அப்போது கண்ணம்மா வீட்டில் மாமா அகில் அஞ்சலி அவர் எல்லாம் சந்தோசமாக இருக்கிறார்களா என கேட்கிறார். அப்போது சௌந்தர்யா என்ன அவர் என்று சொல்கிறாய் இத்தனை நாள் உங்க பையன் என்று தான சொல்வ என கேட்கிறார். பின் கண்ணம்மா பாரதியை சந்தித்து பேசியதை சொல்கிறார். அப்போது பாரதி தான் எனக்கு பிரசவம் பார்த்தார் என சொல்கிறார்.

சௌந்தர்யா நம்ப முடியாமல் இருக்க, இது பற்றி துளசியிடம் கேட்டேன் அவளும் ஆமாம் என சொன்னார். எனக்கு இதை கேட்டதும் 100 மடங்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை சொன்னது உங்க மகன் தான் அதனால் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை என சொல்கிறார். பின் பாரதி உனக்கு பிரசவம் பார்த்ததே நான் தான் உனக்கு ஒரு குழந்தை தான் பிறந்தது என சொல்கிறார். ஆனால் இன்னும் எனக்கு நம்ப முடியவில்லை. எனக்கு ஸ்கேன் செய்த டாக்டர் எனக்கு இரட்டை குழந்தை தான் பிறந்தது என சொல்கிறார்.

தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் காலியிடங்கள்! – நிரந்தர பணியிடத்திற்கு பெண்கள் தேவை

ஆனால் இவர் எனக்கு ஒரு குழந்தை என சொல்கிறார். என் இன்னொரு குழந்தை எங்கே யாரவது தூக்கிக் கொண்டு போயிருப்பாங்களா என தெரியவில்லை. அந்த நேரத்தில் உங்க பையன் என்னைவிட்டு போயிருந்தால் நான் இப்படி நின்னுருக்கமாட்டேன் அதனால் அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என தோணுகிறது என சொல்கிறார் கண்ணம்மா. உடனே சௌந்தர்யா 8 வருடத்தில் ஒரு தடவை கூட என்னிடம் அவன் சொன்னதே இல்லை என சொல்கிறார். பின் கண்ணம்மா அதற்காக என் குழந்தையை நான் தேடாமல் இருக்க மாட்டேன் என சொல்ல, ஒரு நாள் உன் குழந்தை உன்னை தேடி வருவாள் என சௌந்தர்யா சொல்கிறார்.

இரட்டை குழந்தை உண்மையை அறியும் கண்ணம்மா! – எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ!!

பின் சௌந்தர்யா வீட்டிற்கு வந்து கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்தது நீ தானா என கேட்க, பாரதி ஆமாம் என சொல்ல, அகில் அந்த நேரத்தில் அண்ணியும் நீயும் சண்டை போட்டு கோவத்தில் இருந்தீர்கள் என கேட்க, ஆமாம் ஆனால் அந்த நேரத்தில் மருத்துவமனையில் யாரும் இல்லை. அவள் பிரசவ வலியில் துடிக்கும் போது ஒரு டாக்டராக என்னால் பிரசவம் பார்க்க முடியாது என சொல்ல முடியவில்லை என சொல்கிறார். நான் டாக்டர் வேலைக்கு சேர்ந்த போது எல்லாரிடமும் பாகுபாடு இல்லாமல் வேலை செய்வேன் என அம்மாவிற்கு சத்தியம் செய்தேன். அங்கிருந்த நர்ஸ் உதவி உடன் நான் பார்த்த முதல் பிரசவம் அதான் என பாரதி சொல்கிறார்.

அந்த பிஞ்சு குழந்தையை கையால் தொட்டு தூக்கும் போது மனது பரவசமாக இருந்தது என சொல்ல, சௌந்தர்யா சந்தோஷத்தில், கட்டி அணைத்து, வேணுவும் பாரதியை நினைத்து பெருமைபடுவதாக சொல்கிறார். வேணு நீ செய்ததை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என சொல்கிறார். அகில் எனக்கும் உன்னை அண்ணன் என்று சொல்ல சந்தோசமாக இருக்கிறது என சொல்கிறார். பின் அஞ்சலியும் நீங்க எனக்கு ஹீரோ மாதிரி தெரிகிறீர்கள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!