இரட்டை குழந்தை உண்மையை அறியும் கண்ணம்மா! – எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தை பற்றிய உண்மையை கண்ணம்மா அறிந்து கொண்டார். அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா ப்ரோமோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா. TRP ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது அந்த சீரியல். அதில் கண்ணம்மாவின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் பாரதி கண்ணம்மாவினை வீட்டை விட்டு வெளியேற்றினார். மேலும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தையும் சௌந்தர்யா மறைத்து விட்டார். இரட்டை குழந்தைகளில் ஒன்றான லக்ஷ்மியை கண்ணம்மா வளர்க்கிறார். மற்றொரு குழந்தையான ஹேமாவினை பாரதி தன் பிள்ளை என்றே அறியாமல் வளர்க்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் தன் இரண்டாவது குழந்தை பற்றிய உண்மையை அறிய கண்ணம்மா போராடி வருகிறார். அதனை கண்டுபிடிக்க உதவிடுமாறு பாரதியிடமே உதவி கேட்டார். ஆனால் பாரதி, உதவிட முடியாது என மறுத்துவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெண்பா கன்னமாவினை பாரதியிடம் இருந்து பிரிக்க திட்டமிடுகிறார். இந்நிலையில், புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெண்பா கண்ணம்மா வீட்டிற்கு விவாகரத்து பத்திரத்துடன் வருகிறார். இரண்டாவது குழந்தை வேண்டும் என்றால் இதில் கையெழுத்திட வேண்டும் என்று மிரட்டி விட்டு செல்கிறார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து – நாக அர்ஜுனாவின் வைரல் பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
அதில் கையெழுத்து போட கண்ணம்மா முயற்சிக்க பாரதியுடன் கல்யாணம் நடந்தது முதல் அவர்கள் சந்தோசத்துடன் சேர்ந்து வாழ்ந்தது வரை அனைத்தும் நினைவிற்கு வருகிறது. அந்த நேரத்தில் சரியாக சௌந்தர்யா அங்கு வர கண்ணம்மா அதை மறைக்கிறார். ஆனால் அதை வாங்கி பார்க்கும் சௌந்தர்யா, அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மாவிடம் வேறு வழியின்றி ஹேமா தான் உன்னுடைய குழந்தை என்ற உண்மையை அறிவித்து விட்டார். இதனை கேட்ட கண்ணம்மா அழுகிறார். இவ்வாறு அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.