சௌந்தர்யாவிடம் மனம் உடைந்து பேசிய பாரதி, லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சௌந்தர்யாவிடம் மனம் உடைந்து பேசிய பாரதி, லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய
சௌந்தர்யாவிடம் மனம் உடைந்து பேசிய பாரதி, லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சௌந்தர்யாவிடம் மனம் உடைந்து பேசிய பாரதி, லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சௌந்தர்யாவிடம் சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா லக்ஷ்மியை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவிற்கு சட்டப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரிடம் சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். என்ன காரியம் செய்திருக்க என சட்டையை பிடித்து கேட்க 8 வருடமாக பிரிந்து தான இருந்தோம் இப்போது என்ன என பாரதி கேட்க, மனஸ்தாபம் வந்து பிரிவது வேறு சட்டப்படி விவாகரத்து செய்தால் இனிமேல் சேரவே முடியாது என அகில் சொல்கிறார்.

சௌந்தர்யா எங்களிடம் கேட்காமல் ஏன் இப்படி செய்தாய் என கேட்க, எனக்கு நிம்மதி வேண்டும் 8 வருடமாக நான் நிம்மதியாக இல்லை அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் என பாரதி சொல்ல, இத்தனை வருடம் பிரிந்து தான இருந்த இப்போது என்ன என வேணு கேட்க, எனக்கு பயமாக இருக்கிறது. ஹேமாவை என்னிடம் இருந்து பிரித்துவிடுவாளோ என பயமாக இருக்கிறது என பாரதி அழுகிறார். அப்போது சௌந்தர்யா கையை பிடித்து என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டிங்க.

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விபரம் இதோ!

இனிமேல் என்னுடன் சந்தோசமாக பேச வேண்டும் என பாரதி சொல்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மா வந்து என்னிடம் கேட்பாள் நான் என்ன சொல்வது என தெரியவில்லை என சௌந்தர்யா சொல்ல, இப்போது கூட நீங்க அவளை பற்றி தான் நினைக்கிறீங்க என பாரதி அழுகிறார். இந்த விவகாரத்தை தடுத்தால் அப்பறம் நான் உயிரோடு இருக்கமாட்டேன் என பாரதி சௌந்தர்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப அடுத்து என்ன செய்வது என சௌந்தர்யா தெரியாமல் இருக்கிறார்.

மறுபக்கம் கண்ணம்மா லக்ஷ்மியை பற்றி நினைக்கிறார். என்னால் தான் லக்ஷ்மிக்கு இவ்வளவு கஷ்டம். லட்சுமி எந்த தப்பும் செய்யவில்லை அவளுக்கு அப்பா வேண்டும் என கண்ணம்மா முடிவு செய்கிறார். சௌந்தர்யா என்ன திடீரென விவாகரத்து என சொல்கிறான் நமக்கு எப்படி தெரியாமல் இருந்தது என கேட்கிறார். அப்போது கண்ணம்மா வாசலில் வந்து உட்கார்ந்து இருப்பதாக மல்லிகா சொல்கிறார். உள்ளே வா என குடும்பத்தினர் பேச கண்ணம்மா முதலில் உள்ளே வர யோசிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய ஜீவா? வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

கண்ணம்மாவை உள்ளே வர சொல்ல உள்ளே வருகிறார். பாரதி இருக்கிறாரா என கண்ணம்மா கேட்க அகிலை அனுப்பி ரூமை மூட சொல்கிறார். அகில் சென்று ரூமை அடைக்க, கண்ணம்மா வாழ்க்கையில் நடந்தது பற்றி சொல்ல, என் வாழ்க்கை முழுவதும் போக போகிறது. ஆனால் நான் என்ன தப்பு செய்தேன். உங்க யாரிடமும் உதவி கேட்டு நின்றேன உங்க புள்ளையிடம் உதவி கேட்டேனா, ஆனால் உங்க புள்ள விவாகரத்து அனுப்பி இருக்காரு எவ்வளவு பெரிய வக்கீல் வச்சாலும் நான் விவாகரத்து கொடுக்கமாட்டேன்.

அவருடன் வாழ்வதற்கு இல்ல என் புள்ளைக்கு அப்பா வேண்டும். அவளுக்கு இப்போது இல்லை ஒருநாள் இவர் தான் உன்னுடைய அப்பா என காட்டுவேன் என சொல்கிறார். நீங்க எல்லாரும் நினைக்கவே இல்லையா லட்சுமிக்கு அப்பா இல்லாமல் போய்விடும் ஹேமாவிற்கு அம்மா இல்லாமல் போய்விடும் என கேட்க, அப்படி எல்லாம் இல்லை ஆனால் அவன் எங்க எல்லாரது மனதையும் கட்டி போட்டான். விவகாரத்தில் உனக்கு உதவி செய்ய கூடாது என சத்தியம் வாங்கி இருக்கிறான் என சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!