தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (நவ.10) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிறைந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் Post Office சேமிப்பு திட்டங்கள் ஒரு பார்வை – தவறாமல் படிங்க!
கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிக்கும் திறக்கப்பட்டது. மாணவர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிற இந்த நிலையில் கனமழை காரணமாக பல ஊர்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
- சென்னை
- காஞ்சிபுரம்
- நாகப்பட்டினம்
- மயிலாடுத்துறை
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- தஞ்சாவூர்
ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை பெய்து வரும் நிலையினை பொறுத்து விடுமுறை நீடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.